2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் குடும்பஸ்தரை காணவில்லை

Menaka Mookandi   / 2013 மார்ச் 06 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம், கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என காணாமல் போனவரின் மனைவி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யதுள்ளார்.

ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பழனி முருகையா இராஜேந்திரன் (வயது 42) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வீட்டிலிருந்த கடைக்குச் செல்வதாக கூறி சென்ற கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என காணாமல் போனவரின் மனைவி, அவரது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர், கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டவர் என்பது குறிப்படத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .