2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காலாவதியான பொருட்கள் விற்பனை; தண்டப்பணம் அறவீடு

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காலாவதியான பொருட்களை  விற்பனை செய்த 27 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், மல்லாகத்தில் 21 வர்த்தகர்கள் மற்றும் ஊர்காவற்துறையில் 11 வர்த்தகர்களுக்கு எதிராக மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வர்த்தகர்கள் நேற்று  நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுததப்பட்டவேளை,  ஊர்காவற்துறை பகுதியில் 11 வர்த்தகர்களுக்கு எதிராக 55 ஆயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டதுடன் மல்லாகம் பகுதியில் 16 வர்த்தகர்களுக்கு எதிராக 47 ஆயிரத்து 500 ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டது.

அத்துடன், மல்லாகம் நீதிமன்றில் வழக்கிற்கு சமூகமளிக்காத 5 வர்த்தகர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட அதிகாரி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X