2025 ஜூன் 21, சனிக்கிழமை

அனந்தியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி  எழிலனின் மனைவி அனந்தி பயணித்த வாகனத்தில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணியளவிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரச்சார நடவடிககையை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே யாழ் ஐந்து சந்திப்பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்களே தனது வாகனத்தின் மீது கல்வீச்சு நடத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு  செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கட்சி தலைமைக்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • AJ Wednesday, 11 September 2013 07:58 AM

    நவீ பிள்ளையை சந்தித்த காரணத்துக்கும் உண்மையை சொன்ன காரணத்துக்கும் கிடைத்த பரிசு. நேற்று யாரு சொன்னார்கள் இங்கு யாரும் அச்சுறுத்தபடவில்லை என்று. அப்போ இது என்ன தக்காளியா?

    Reply : 0       0

    piloman Friday, 13 September 2013 03:47 PM

    நவநீதம் பிள்ளையை நான் சந்தித்தேன், எனது சுகநலன் குறித்து நவநீதம்பிள்ளை விசாரித்தார் என்றால் நம்புவீங்களா? ஐயா இவருக்கான சந்திப்பு அனுமதிகிடைக்கவில்லை. இறுதியில் மன்னார் பிசப்பின் குழுவில் இவர்தான் ஆனந்தி என்று நவநீதத்திற்கு தெரியாமல் கும்பலோடு கும்பலாக சந்தித்தார்.

    ஏன் அப்படி சந்திக்க வாய்ப்பிருந்தால் கூட்டமைப்பைச் சந்தித்த போது ஏன் அனந்தியை அழைத்துச் செல்லவில்லை? எல்லாம் புறுடா? இவரது கணவன் செய்தமனித உரிமை மீறல்களுக்கு இவ பொறுப்பு கூறுவாவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .