2025 ஜூன் 21, சனிக்கிழமை

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தண்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்த வர்த்தகர்கள் எட்டு பேருக்கு 80,000 ரூபா தண்டம் யாழ். நீதிமன்றினால் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர்; அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் தெரிவித்தார்.

கடந்த வாரம் யாழ். நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளான கோப்பாய், இருபாலை, நீர்வேலி போன்ற பகுதிகளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஒன்பது வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் ஒன்பது பேருக்கும் எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மேற்படி வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது, எட்டு வர்த்தகர்களுக்கும் தலா 10,000 ரூபா வீதம் 80,000 தண்டம் அறவிட்டதுடன், மன்றிற்கு சமூகமளிக்காத வர்த்தகருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .