2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விடுதியில் அத்துமீறி நுழைந்தவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 25 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.பிரதான வீதியிலுள்ள விருந்தினர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிறிகரன் நிஷhந்தனை வழக்கிலிருந்து முற்றுமுழுதாக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (25) விடுவித்தார்.

மேற்படி விடுதிக்குள் நுழைந்து விபசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி ஜோடியொன்றைப் பிடித்தமை தொடர்பாக விடுதி உரிமையாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நிசாந்தன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணப் பொலிஸாரினால் நிசாந்தன் கைதுசெய்யப்பட்டதுடன், மறுநாள் 2 ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அதன்போது, நீதவான் பொ.சிவகுமார், இவரை 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன், குறித்த வழக்கினை ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரையும் ஒத்தி வைத்திருந்தார்.

மீண்டும் ஆகஸ்ட் மாதம் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிசாந்தனுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களை முன்வைக்கும்படி பொலிஸாருக்கு தெரிவித்து, வழக்கினை பெப்ரவரி  (25) ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று  (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸார் தகுந்த ஆதாரங்களை முன்வைக்காமையினால் நிசாந்தனை வழக்கிலிருந்து முற்றுமுழுதாக நீதவான் விடுவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .