2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கரையொதுங்கிய சடலம் இந்திய மீனவருடையதா?

George   / 2015 மார்ச் 15 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் கோடிக் கடற்கரையில் ஆணொருவரின் சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை(15) அதிகாலையில் கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலை மற்றும் கால் ஒன்று அற்ற நிலையில் கரையொதுங்கிய குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

வடமராட்சி பகுதியில் மீனவர்கள் எவரும் காணாமற்போகாத நிலையில் இது இந்திய மீனவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X