2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரயிலிலிருந்து வீழுந்த மூதாட்டி காயம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற ரயிலில் ஏறமுற்பட்டு தவறி விழுந்ததில் படுகாயமடைந்த மூதாட்டியொருவர் வியாழக்கிழமை (19), யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியைச் சேர்ந்த கோ.சரோஜாதேவி (வயது 66) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

கொழும்புக்குச் செல்வதற்காக இன்று காலை புகையிரத நிலையத்துக்கு சென்ற இவர், ரயிலில் ஏறுவதற்கு முற்பட்டபோது தவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X