2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் கைதானவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Gavitha   / 2015 மார்ச் 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் வரணி பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு ஐந்து வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதிநந்தசேகரன் வெள்ளிக்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

கடந்த 05ஆம் திகதி வரணி வடக்கு, பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில், அதேபகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை கொடிகாமம் பொலிஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு அமைய நீதவான் மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X