Freelancer / 2023 மார்ச் 01 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
கல்வியங்காடு - ஜிபிஎஸ் வீதியில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வயோதிப தம்பதிகள் வசித்து வரும் வீட்டில் வேலை செய்ய தினந்தோறும் வந்து அவர்களுக்கு உதவி புரிந்து வந்த நபர் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று 27 ஆம் தேதி இரவு சீசீரிவி CCTV பொருத்த வேண்டும் என வீட்டுக்குள் நுழைந்து திருட்டினை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது 32 1/2 பவுண் நகை திருடப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026