2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கசிப்புடன் 15 வயதுடைய சிறுவன் கைது

Janu   / 2024 மார்ச் 11 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் கசிப்பு உடைமையில்  வைத்திருந்த  15 வயதுடைய  சிறுவன் ஒருவன் சாவகச்சேரி பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை  (10) கைது செய்யப்பட்டுள்ளர் .

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  குறித்த  சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது , சிறுவனிடமிருந்து  4 லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் , சிறுவனிடம் கசிப்பினை கொடுத்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக  தெரிவித்துள்ளனர் .

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X