2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கரை ஒதுங்கிய கூடாரம்

Janu   / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று புதன்கிழமை (22)  கரையொதுங்கியுள்ளது.

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் கடற்படையினரால்  அதை அப்புறப்படுத்தியுள்ளனர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டுள்ளதோடு  இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் , காணப்படவில்லை என தெரியவந்துள்ளது . 

எஸ்.  தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X