2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சிறுமியை கடத்திய சிறுவன் கைது

Janu   / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (18)   முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , வீட்டிற்கு விரைந்து ,  சிறுமியை மீட்டுள்ளதுடன்  , சிறுவனை கைது செய்துள்ளனர்

மேலும் பொலிஸாரால்  , குறித்த  சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X