2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா

Editorial   / 2024 ஜனவரி 05 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடக்குக்கு நான்கு நாள் பயணமாக   வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார். 

இந்நிலையில்   யாழில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் 

இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தை கில்மிஷா உதயசீலன் சூட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .