Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜூலை 18 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவின்போது, வெளி வீதியில் நல்லூர்க் கந்தன் உலா வர மாட்டார் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நல்லூரின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இம்முறை தேர்த்திருவிழாவின்போது நல்லூர்க் கந்தன் வெளி வீதியுலா வர மாட்டார் எனக் கூறப்பட்டிருந்த நிலையிலேயே அது உண்மைக்கு புறம்பான செய்தியெனவும், வழமை போலத் திருவிழா இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்துக்கு கடைத் தொகுதிகள் இருக்காதெனவும் கூறப்பட்ட நிலையில், இது யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொறுப்பெனவும் இது குறித்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் விரைவில் இடம்பெறவுள்ள கூட்டத்தின்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago