2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண் உரிமை, பாதுகாப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு

Freelancer   / 2023 மார்ச் 08 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

சர்வதேச மகளிர் தினமான இன்று  (08), பெண்களுக்கான உரிமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கவனயீர்ப்பும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன. 

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தால் இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

“புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் பெண்களுக்கான உரிமைகளை வழங்கவேண்டும்”, “பெண்கள் வன்முறைகளில் இருந்து மீட்கப்படவேண்டும்”, “ஒவ்வொரு பொது அமைப்புக்களிலும் பெண்களின் பிரதிநித்துவ பங்கேற்பு அதிகாரிக்க வேண்டும்” மற்றும் “பெண்கள் தங்கள் கோரிக்கையை முன்வைக்கும் தளங்கள் உருவாக்கப்படவேண்டும்” போன்றன இதன்போது வலியுறுத்தப்பட்டன.(N) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .