2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொலிஸார் மீது தாக்குதல்

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செந்தூரன் பிரதீபன்

துன்னாலை பகுதியில் கசிப்பு உற்பத்தியைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உடையில் சென்ற பொலிஸார் மீதே கல்வீச்சு மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று (14) மாலை குடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடவத்தை மற்றும் தக்குச்சம்பாடி மற்றும் கோயில் சந்தை பகுதிகளில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதனை தடுப்பதுக்கு செல்லும் பொலிஸார் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .