2025 மே 17, சனிக்கிழமை

போலி ஆவணங்களைத் தயாரித்து காணிகள் விற்பனை

எம். றொசாந்த்   / 2019 மே 27 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது.

காணிகளுக்கு போலி உறுதிகளை முடித்து காணிகள் விற்கப்படும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக, சட்டத்தரணிகள் ஊடாக தமது பெயருக்கு மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .