2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு இளைஞன் யாழில் சடலமாக மீட்பு

Janu   / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்  திங்கட்கிழமை  (31) பதிவாகியுள்ளது .

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே இவ்வாறு நிலையில்   உயிரிழந்த  மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்ற நிலையில்  காணாமல் போயுள்ளதாகவும்  திங்கட்கிழமை  (31)  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X