2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மயங்கி விழுந்த இளைஞன் மரணம்

Janu   / 2024 மார்ச் 11 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் நியூமோனியா காய்ச்சலால்    பாதிக்கப்பட்ட   இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை  (10) உயிரிழந்துள்ளார்.

துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் என்ற 
29 வயதுடைய  இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த  இளைஞன் அவரது  வீட்டில் வைத்து  திடீரென மயங்கி விழுந்துள்ளதுடன் 
அவரை  வீட்டாரால்  மீட்கப்பட்டு  , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

இது  தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளின்  போது  நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது .

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X