2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மின் கசிவால் வீடு தீக்கிரை

Janu   / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ள சம்பவம்  புத்தூர் கலைமதி பகுதியில்   திங்கட்கிழமை (26)  இரவு பதிவாகியுள்ளது . 

வீட்டார் ,  அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காததால்  யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , தீயணைப்பு படையினரால்  தீயினை கட்டுப்பாட்டுக்குள்  கொன்டுவரப்பட்டுள்ளது . 

குறித்த  தீ  விபத்து,   மின் கசிவு காரணமாக ஏற்ப்பட்டுள்ளதாக  ஆரம்ப கட்ட விசாரணைகளின்  போது  தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை  அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .

 எம்.றொசாந்த்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X