Janu / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ள சம்பவம் புத்தூர் கலைமதி பகுதியில் திங்கட்கிழமை (26) இரவு பதிவாகியுள்ளது .
வீட்டார் , அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காததால் யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , தீயணைப்பு படையினரால் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரப்பட்டுள்ளது .
குறித்த தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்ப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .
எம்.றொசாந்த்

2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026