2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு விசேட அலகு ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பி தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் நலன் கருதி, தென்மராட்சி பிரதேச செயலகத்தில் விசேட அலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அலகு, பிரதேச செயலகத் திட்டமிடல் கிளை அலகில் இயங்குகின்றது.

021-2271014 / 0766363131 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென, பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .