2025 மே 03, சனிக்கிழமை

யாழில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19 தொற்று

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் எட்டுப் பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டிருநதது. இதில், எட்டுப் பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது சங்கானையில் நான்கு, உடுவிலில் ஒருவர், பண்டத்தரிப்பில் ஒருவர், மானிப்பாயில் ஒருவர், வடலியடைப்பில் ஒருவர் என மொத்தமாக 8 வர்த்தகர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X