2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

லொறி விபத்தில் ஒருவர் காயம்

Janu   / 2024 மார்ச் 07 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியொன்று நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அருகிலிருந்த கடையொன்றில்  மோதி விபத்துக்குள்ளான  சம்பவம்  வியாழக்கிழமை (07) பதிவாகியுள்ளது .

இவ்  விபத்தில் லொறியின் சாரதி காயங்களுக்குள்ளாகிய நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது  தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும்  சேதமடைந்துள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .

மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது .

நிதர்ஷன்  வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X