2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மணல் சரிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

கருவலகஸ்வெவ பிரதேசத்திலுள்ள மீஓயா ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  ஒருவர்  மணல் சரிந்து வீழ்ந்ததில்  உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான மங்கல ருவன் குமார (வயது 33) என்பவரே உயிரிழந்தவராவர்.

மணல் தோண்டி விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இவர், வழமைபோன்று மீஓயா ஆற்றுப் பகுதியில்  நேற்று புதன்கிழமை மாலை  மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது, திடீரென  மணல் சரிந்து வீழ்ந்ததால் அதில் சிக்குண்டு இவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆனமடு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஆனமடுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X