2025 மே 15, வியாழக்கிழமை

புத்தளத்தில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9ஆம் வட்டாரப் பிரிவுக்கான 'தேசத்திற்கு மகுடம்' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவை நடைபெற்றது.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதன்போது குறைந்த வருமானமுடையவர்களுக்கு  இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன்,   இரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.  அத்துடன்  மின்சாரம், அடையாள அட்டை, குடிநீர், வீட்டு வசதிகள் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டன.

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் புத்தளம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகரபிதாவுமான கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .