2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

14 வயதுச் சிறுமியொருவரை 2  வருடங்களாக  வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் இளைஞரொருவரை நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தங்கொட்டுவ, எட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய  ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

அயலவரான இச்சந்தேக நபர் 2011ஆம் ஆண்டு தொடக்கம் தன்னை வல்லுறவுக்குட்படுத்தி வருவதாகவும் தனது வீட்டில் பெற்றோர் இல்லாத வேளைகளில் வந்து இச்சந்தேக நபர்  தன்னை அச்சுறுத்தி வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாகவும் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார். 

சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X