Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
பறகஹதெனிய முஸ்லிம் வர்த்தகர்களின் அனுசரணையுடன், மாவத்தகம பொது சுகாதார பரிசோதகர்களின் ஏற்பாட்டில், கிருமி நாசினி விசிறும் பணி, சமூகத் தொண்டர்கள் மூலம், மாவத்தகம பொது சுகாதார பரிசோதகர் எல். எச். எம். எச். பண்டார தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவத்தகம பஸ்தரிப்பிடம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பொதுஇடங்களிலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஏனைய புறநகர் பகுதிகளிலும், கிருமி நாசனி விசுறும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவத்தகம பொது சுகாதாரப் பரிசோதர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பறகஹதெனிய முஸ்லிம் வர்த்தகர்கள், தொற்று நீக்கும் உபகரணங்களைக் கையளித்தனர்.
இந்நிகழ்வில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வர்த்தகர்கள், சமூகத் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





36 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago