2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 11.6 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.சேகர்

நடப்பு ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 11.6 வீதத்தால் அதிகரித்து 93,232 ஆக பதிவாகியிருந்தது.

பெருமளவான சுற்றுலாப்பயணிகள் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பாவிலிருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 13.7 வீதத்தால் அதிகரித்து 43,635ஆக பதிவாகியிருந்ததுடன், பிரித்தானியாவிலிருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 26.1 வீதத்தால் அதிகரித்து 11,031 ஆகவும், ஜேர்மனியிலிருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 8.1 வீதத்தால் அதிகரித்து 8276 ஆக பதிவாகியிருந்தது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப்பயணிகளின் வருகை குறித்த புள்ளி விபரங்களை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஏதேனும் பின்னணிக் காரணிகள் உள்ளதா எனும் நோக்கில் கடந்த வாரம் தமிழ் மிரர் வணிக செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .