2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 75 பில்லியன் ரூபா நட்டம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சனிக்கிழமை முதல் பெற்றோலின் (90 ஒக்டேன்) விலை லீற்றருக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பட்டதுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா விளக்கமளிக்கையில், ”கடந்த ஒக்டோபர் மாதம் வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 75 பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம், சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இலங்கையில் விலையில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமை அமைந்திருந்தது. இந்த நிலையை சீர் செய்யும் வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டது” என்றார்.

தற்போது விலை லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், கூட்டுத்தாபனம் இன்னமும் லீற்றர் ஒன்றுக்கு 5ரூபா வீதம் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெற்றோலானது மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள்  பஸ்கள் போன்றன டீசலை பயன்படுத்துவதால் இந்த விலை அதிகரிப்பின் மூலம் நேரடி பாதிப்பை எதிர்நோக்கவில்லை. டீசல் விலையும் அதிகரிக்கும் பட்சத்தில் பேருந்து கட்டணங்கள் முதல் மின்சார கட்டணங்கள் வரை அனைத்து பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். பண்டிகை காலமென்பதால் இந்த செயற்பாட்டை அரசு மேற்கொள்ளவில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .