2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

எயார்ஏசியாவின் கோலாலம்பூர் – கொழும்பு விமான சேவைகள் பெப்ரவரியிலிருந்து இடைநிறுத்தம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 22 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கும் கொழும்புக்குமிடையிலான எயார்ஏசியா விமான சேவைகளின் மூலம் முன்னெடுக்கப்படும் தினசரி விமான சேவைகள் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தக நோக்கம் கருதியே இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சேவை இடைநிறுத்தம் குறித்து தமது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் அறிவித்தல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும், பெப்ரவரி 26ஆம் திகதிக்கு பின்னர் தமது பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பதிவுகளை மேற்கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி ஆசன இருக்கைகளுக்கு அமைவாக முற்கூட்டியே தமது பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் நிறுவனம் வழங்கவுள்ளது. மேலும் மூன்று மாத காலப்பகுதியினுள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட்ட பணத்தை மீள செலுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவின் முன்னணி உள்நாட்டு விமான சேவைகள் வழங்குநராக எயார் ஏசியா இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தம் நிறைவடைந்தததை தொடர்ந்து, கோலாலம்பூர் நகருக்கும் கொழும்புக்குமிடையிலான விமான சேவைகளை கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .