2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஹமில்டன் கால்வாய் மறுசீரமைப்பு திட்டம் தொடர்கிறது

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமில்டன் கால்வாய் மறுசீரமைப்பு மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இதற்கமைவாக நீர்கொழும்பு பகுதியிலுள்ள கால்வாய் சுத்தம் செய்யப்படுவதாகவும், பள்ளியாவத்தை பகுதியில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்படுவதாகவும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடிவதுடன் சுற்றுலாப்பயணிகளை கவரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

22 கிலோ மீற்றர் நீளமாக ஹமில்டன் கால்வாயை மறுசீரமைப்பு மற்றும் சுத்தம் செய்வதற்கான பொறுப்பை மேல் மாகாண சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை போன்றன இணைந்து முன்னெடுக்கின்றன.

இந்த நடவடிக்கைகளில் சுமார் 9 கிலோமீற்றர் அபிவிருத்தி பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய 14 கிலோ மீற்றர் பகுதிக்கான மறுசீரமைப்பு பணிகள் தற்போது இடம்பெறுகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் மீன் பிடி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஜெட்லைனர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் போன்றனவும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .