2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உள்கட்டமைப்பு மேம்படுத்தலுக்கு டயலொக் வழங்கும் உறுதிமொழி

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சுகாதார அமைச்சினால் (MOH)  தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICUக்களை விரிவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சகத்திற்கு ரூ. 2,000 இலட்சத்தினை வழங்கியுள்ளது.

முக்கியமான பராமரிப்பு சேவைகளை வழங்க சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு அணுகல் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

நோயாளிகளின் கவனிப்பு மற்றும் சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இது தேசிய பராமரிப்பின் மிக உயர்ந்த மட்டங்களைக் குறிக்கிறது.

இலங்கையிலுள்ள தீவிர சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்கும், அதிநவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து சேர்க்கைகளுக்கும் ICU களுக்கான அணுகலை அதிகரிப்பதற்கும், COVID-19 தொற்று தொடர்பான சேர்க்கைகளுக்கு மட்டுமல்லாமல், இலங்கையில் ICU திறனை மேம்படுத்துவது, இது கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுமல்லாமல், தீவிர சிகிச்சை தேவைப்படும் கோவிட் தொற்றாளர்களுக்கும் ஏனைய அனைத்து நோயாளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும் பொருட்டு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ரூ.2,000 இலட்சத்தினை வழங்கிய உறுதியளித்துள்ளது.

சுகாதாரம்,மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியராச்சி கருத்து தெரிவிக்கையில், 'இந்த தேசிய செற்பாட்டிற்காக பெரியளவிலான தொகையை வழங்கியமைக்காக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி க்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக நாட்டின் தேவைகள் மிகப் பெரியதாக இருக்கும் சமயங்களில், டயலொக் நீண்ட காலமாக ஒரு நிலையான ஆதரவாளராகவூம், தேசிய வளர்ச்சிக்கு உதவியாகவும் இருந்து வருகிறது.

'டயலொக்கின் இந் நன்கொடையானது இலங்கையில் காணப்படும் ஏனைய நிறுவனங்களுக்கு  முன் உதாரணமாக திகழ்ந்து, நாட்டில் கொரோனா வைரஸின் பரவலைக் தடுப்பதற்கான எங்கள் முயற்சிகளுக்கும், நமது சமூக நல முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்' என தெரிவித்தார். 

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்ஹ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 'தற்போதைய சூழ்நிலையில் COVID -19 நெருக்கடியை எதிர்கொண்டு, நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான டயலொக் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கிய இந்த நன்கொடையானது பெரிதும் மதிக்கத்தக்கது.

இந்த முன்முயற்சியின் மூலம் உருவாக்கப்படும் ICU உள்கட்டமைப்பு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படலாம், இது கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுமல்லாமல், நாட்டின் ICU உள்கட்டமைப்பை உயர் மட்டத்திற்கு இட்டுச்செல்லும். எனவே, கௌரவ அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் முழு ஊழியர்கள் சார்பாக டயலொக் ஆசிஆட்டாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.'

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில்,COVID -19 தொற்று  நோயின் பாதகமான விளைவுகளைத் தணிப்பதில் அரசாங்கத்தின் பரந்த அளவிலான முயற்சிகளுக்கும், முன்னணியில் உள்ள அனைவருக்கும், இந்த எதிர்பாராத  நேரத்தில் தங்கள் சொந்த பாதுகாப்பையும் நல்வாழ்வையும் தியாகம் செய்ய தயாராக உள்ள அனைவருக்கும் நாம் நன்யுள்ளவர்களாக இருக்கின்றோம். 

எமது இந்த தேசிய முயற்சியை ஆதரிப்பதற்கும், நமது சமூகங்களுக்கு அவர்களின் மிகப் பெரிய தேவை ஏற்படும் நேரத்தில் பாதிப்பைப் போக்க உதவுவதற்கும், டயலொக் ஆசிஆட்டா சுகாதார அமைச்சினால் அவசரமாக தேவைப்படும் ICU உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கு ரூ.2,000 இலட்சத்தினை வழங்கியுள்ளது.இந்த முயற்சியை செயல்படுத்துவதற்கும், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எங்களுக்கு பலத்தினை வழங்கிய 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X