2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏ-9 வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

Editorial   / 2023 மே 07 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

கிளிநொச்சி ஏ-09 வீதியில் இன்று(07)  இடம்பெற்ற வீதி விபத்தில்  ஒருவர் படுகாயமடைந்து  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சி நகரில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் ஒன்று சமிக்கை எதுவுமின்றி  திடீரென திருப்பியபோது  பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது.

 இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த  நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .