2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஒரு மாம்பழம் 162 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை

Editorial   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாம்பழம் ஒன்று 162 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம்,   வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இடம்பெற்றுள்ளது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான சனிக்கிழமை (26) மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர், 162 ரூபாய்க்கு குறித்த மாம்பழத்தை ஏலத்தில்  கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

  க. அகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X