2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

க​ஜ முத்து மீட்பு : இருவர் கைது

Freelancer   / 2023 ஜூன் 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாங்குளம்  விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுனியா நகரில் சனிக்கிழமை(10) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது, கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ​இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் ​போது  கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்டது. அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து   மீட்க்கப்பட்டது.

  காரில் இருந்த 26 ,23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தெ‌ஹியந்தர,ஹக்மன பிர​​தேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த  ​​பொலிஸ் ஊடக பிரிவு மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும், வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X