Freelancer / 2023 ஜூன் 11 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுனியா நகரில் சனிக்கிழமை(10) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது, கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்டது. அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்க்கப்பட்டது.
காரில் இருந்த 26 ,23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தெஹியந்தர,ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடக பிரிவு மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும், வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago