2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

Freelancer   / 2023 நவம்பர் 29 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது,

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (28) ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் நீண்ட காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த பெண்ணை இன்று (29) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இது தொடர்பாக ஒருவர் தேவைப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .