2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சாளம்பன்குளத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

Editorial   / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூவரசம்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன்குளம் பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறிவிழுந்து மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பல பாடசாலைகளுக்கு இடையில் எல்லை போட்​டி வியாழக்கிழமை (17) நடைபெற்றது.

அதில் பங்​கேற்க வந்திருந்த  பண்டுவஸ்நுவர பிரதேசத்தைச் சேர்ந்த  14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு மரணித்துள்ளனர்.

விளையாட்டுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் இருந்து வெளியேறி, சற்று தூரத்தில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போதே, இவ்விருவரும் காலிடறி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்துவிட்டனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X