2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்னாரில் மேலும் 26 தொற்றாளர்கள் அடையாளம்

Niroshini   / 2021 நவம்பர் 09 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

மன்னார் மாவட்டத்தில் நேற்று  (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 2,547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று (9) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையிலேயே,இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 154 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 7ஆம் திகதி மன்னாரை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இவ்வருடம் 2,530 கொரோனா தொற்றாளர்களும் தற்போது வரை 2,547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .