2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் மினி சூறாவளி

Editorial   / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில்   இன்று  (10) மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது இதனால் தற்காலிக வீடுகளில் வாசித்தவர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மானுருவி கிராமத்தில் மின்னல் தாக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

மானுருவி கிராமத்தில் வசிக்கும் நாதன் என்ற விவசாயியின் காணில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளதுடன் மின்னல் தாக்கத்தினால் வீட்டில் உழவியந்திரத்தின் கொட்டகை உடைந்துவீழ்ந்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டில் பயன்தரு மரங்கள் சில மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X