2025 மே 19, திங்கட்கிழமை

வவுனியாவில் திடீர் சுற்றிவளைப்பு: ஐவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய பகுதிகளில், தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, இன்று (23) காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும், நன்னீர் மீன்பிடித்தலில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாக, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், சூடுவெந்தபுலவு பகுத​ஜயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்த விசேட அதிரடிப்படையினர், அவர்களிடம் இருந்து 150,000 ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளனவெனவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X