2024 மே 02, வியாழக்கிழமை

வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தி

Freelancer   / 2023 டிசெம்பர் 23 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுலவு பகுதியில் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டிக்கு பின்புறமாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடா மீட்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளன.

இவரை நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .