Princiya Dixci / 2017 மே 17 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலில் தோற்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனச் சபதம் எடுக்க வேண்டும். அதனை விடுத்துக் கோழைகள்போல் அழுவது அழகு அல்ல; இழிவு.
உண்மையான காதலில் தோற்றால், கவலை வராதா? அதனை அனுபவித்தால்தான் அதன் அருமை புரியும் எனக் காதலர்கள் புலம்புவதும் வியப்பு அல்ல.
எந்தத் தோல்விக்கும் பின்னர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்காமல் சோகத்துடன் சிநேகம் கொள்வதனால் என்ன பயன்?
சாதனைகள் செய்த பலரது வாழ்க்கையிலும் சோதனைகள் ஏற்படாமல் இருக்காது. காதல் தோல்வியால் தன்னை அழிக்க எண்ணுதலே சுயநலப் போக்குத்தான்.
உலகில் இருந்து எல்லா நலன்களையும் பெற்று விட்டவர்கள், ஒருவிதத்தில் கடன்காரர்கள்தான். கடனைத் திருப்பிச் செலுத்துவது யார்? தோல்வியால் மரணிக்க விரும்புவது துரோகம்.
வாழ்வியல் தரிசனம் 17/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago