2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்?

Princiya Dixci   / 2017 ஜனவரி 19 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

போனால் போகட்டும் எனச் சிலர் வெகு சுலபமாகச் இழப்புப் பற்றிச் சொல்லுவார்கள். தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்? எதற்காக நடந்தது? என்பது பற்றிச் சிந்திக்காமல் இப்படிச் சொல்லலாமா?  

எதனையும் செய்யும்போது, அது பற்றித் தெரிந்து, ஆராய்ந்து செய்ய வேண்டும். நட்டங்களுக்கான காரணத்தை அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்? 

பாடுபட்டு உழைத்தவர்கள் கூட தங்களது அறியாமையினால் ஈட்டிய பொருளைப் போக்கடித்துவிட்டு, வாட்டத்துடன் வாழுகின்றனர்.  

உழைப்பதைவிட, அதன் மூலம் சேர்த்த பொருளைக் காப்பாற்றுவதே பலருக்கும் சிரமமாக இருக்கிறது.  

நிதானம், எச்சரிக்கை, முன் அனுபவம், இவையே அத்தொழிக்கு வாய்ப்பாக அமையும். உணர்க! 

 

வாழ்வியல் தரிசனம் 19/01/2017

பருத்தியூர் பால – வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .