2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

உறுதியின்றேல் நிறைவு இல்லை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுக்குள் எழும் சில பிரச்சினைகளுக்கு மனச்சாட்சியின்படி முடிவு எடுப்பீர்களாக. சிலசமயங்கள் நீதியான தீர்மானங்களை எடுக்க முயலும்போது, உங்களுடன் நீங்களே முரண்படும் நிலையும் ஏற்படலாம். 

எப்பொழுதும் சார்ந்தேன் பக்கமாகவே சாயக்கூடாது. எங்களை வெல்லும் நிலையை நியாயத்தின் பொருட்டு எடுத்தேயாக வேண்டும்.  

மனித மனம் சில சமயம் ஆசைகளுக்கு உட்பட்டு, சலனத்தின் வழி புகுந்தும் விடலாம். மனிதன் பிறருடன் போராடுவதைவிட, தன்னுடன் போராடுவதே மிகச் சிரமமாக இருக்கும்.  

நியாய, அநியாயங்களை உள்மனது புரிந்து கொள்ளும். எனவே, நெஞ்சில் உறுதியுடன் இருப்பேன் என நாங்கள் எமக்குக் கட்டளையிட்டேயாக வேண்டும். உறுதியின்றேல் நிறைவு இல்லை. 

 

வாழ்வியல் தரிசனம் 01/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .