Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலர்ச் சோலையில் காதல் ஜோடி சேர்ந்து பேசலாயினர்.
அவன் சொன்னான், “நீ இல்லாது போனால் நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்றான். அதற்கு அவள், “நான் மட்டும் ஒரு கணமும் தாமதிக்காமல் உயிர் தரிக்கேன்” என்றாள். சற்று நேரத்தில் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
அடுத்த ஓரிரு நாள்களில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் தமக்குத் திருமணம் வீட்டில் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.
‘சரிசரி இனி என்ன செய்ய’ எனக் கூறி, “பிரிவோம்” என்றனர்.
காதலி மனதுக்குள் சொல்லிக்கொண்டாள், ‘அடபோயும் போயும் பிச்சைக்காரன் உன்னை எனக்கு எதற்கு? எனக்குத்தான் பணக்கார மாப்பிளை கிடைத்துவிட்டானே’ எனப் பெருமைப்பட்டாள். அவனும் தனது மனதுக்குள் ‘அடி போடி, எனக்கு கோடீஸ்வரப் பெண் கிடைத்துவிட்டாளே இனி எனக்கு நீ எதற்கு’ என்றான்.
இருவருமே அழுது முடித்துவிட்டால் போதும் எனச் சந்தோசமாகச் சென்றனர். இதுவும் ஒரு புனிதக் காதல்தான். சந்தர்ப்பத்தில் சாயும் பொய்மையில் சாயம் போன காதல்.
வாழ்வியல் தரிசனம் 06/04/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago