Princiya Dixci / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உனக்கு மட்டும் இந்த இரகசியத்தைச் சொல்கின்றேன். தப்பித்தவறி வேறு ஒருவரிடமும் இந்த இரகசியத்தைச் சொல்ல வேண்டாம்” எனச் சொல்லுவார்கள். ஏற்கெனவே, இந்தச் சமாசாரத்தைப் பலபேரிடமும் சொல்லியிருப்பார்கள். இந்த இரகசியம் இப்படியே பலபேரூடாகப் பரவி, வேற்று உருவுடன் பரபரப்பாய்ப் போய்ச் சேருவதை, முதலில் சொன்னவர் கேட்டாலே ஆச்சரியப்பட்டுப் போய்விடுவார்.
ஒருவரது இரகசியத்தை அல்லது பல நபர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரகசியமாக்குவது சிலருக்கு இஷ்டமான பொழுதுபோக்கு.
ஆனால், தங்கள் வீட்டு விடயங்களை, மூடிமறைத்துவிட்டு, மற்றவர் விடயங்களில் கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது வேடிக்கையானது; ஆனால் விஷமத்தனமானது.
சில அப்பாவிகளிடம் கண்ட விடயங்களையும் பரிமாறினால் அவர்களும் சொல்லக் கூடாத விடயங்களை உடன் மற்றவர்களிடம் பரிமாறிக் கொண்டு விடுவர்.
நாங்கள் பேசுபவர்களின் நடத்தையறிந்து, பேச்சை அளந்து பேசுதல் நல்லது.
வாழ்வியல் தரிசனம் 27/02/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026