2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிறரின் முயற்சிகளையும் கஸ்டங்களையும் உணருவதேயில்லை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்கு மட்டும் பிறர் நம்பிக்கையாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள், பிறருக்குத் தாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்களா எனச் சிந்திக்கின்றார்களா?

தங்கள் நலன்களை மட்டுமே மையப்படுத்தி, ஏனையவர்களைச் சிறுமைப்படுத்துதல் சிறுமதியாளர் குணம்.

இத்தகைய பேர்வழிகள் தங்கள் செயலுக்காக வெட்கத்தையும் சுயகௌரவத்தையும் விட்டொழித்தவராவர்.

கூசாமல் முறைகேடாக உதவிகேட்பதும், உதவி புரிய இயலாதவர்களைக் கேலி செய்து, திட்டித்தீர்க்கும் பிரகிருதிகளை என்ன செய்வது?

சமூகம் தனக்காக எல்லாவற்றையுமே இலவசமாக வழங்க வேண்டும் எனச் சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பிறரின் முயற்சிகளையும் கஸ்டங்களையும் உணருவதேயில்லை. மற்றவர்கள் வலிகளை உணர்ந்தவன், பரிவுடன் எவருக்கும் உதவுபவன் ஆகின்றான்.

வாழ்வியல் தரிசனம் 08/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .