2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வலிந்து சேஷ்டை செய்தால், எளியவரும் வலியவர் ஆவார்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது முன்னோர்கள் கூறிய சில விடயங்களை, தற்போதைய இளைய தலைமுறையினர், மூடநம்பிக்கை, ஆதாரம் இல்லாத பேச்சு எனக் கேலி செய்வதுண்டு.  

நாகபாம்பு என்கின்ற நல்ல பாம்பைக் கொன்றபின், உடனே எரித்து, மண்ணில் புதைத்துவிட வேண்டும் என முன்னோர்கள் கூறிய விடயத்தைக் கேலி பண்ணும் இவர்கள், அதன் உண்மை, விஞ்ஞான பூர்வமானது என்பதை அறிய வேண்டும்.

இறந்துபோன இந்தப் பாம்பில் இருந்து சுரக்கும் நீர், அதிலிருந்து எழும் மணம் என்பன, அதன் இனத்தைச் சேர்ந்த ஏனைய பாம்புகளை வரவழைக்கும்.

நாகபாம்பு வலிந்து தாக்க வருவதுமில்லை. படம் எடுத்து எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றுவிடும். எனவேதான், அதனை நல்ல பாம்பு என்று சொல்கின்றார்கள்.

வலிந்து சேஷ்டை செய்தால், எளியவரும் வலியவர் ஆவார்.

வாழ்வியல் தரிசனம் 03/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .