Thipaan / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் புகழ்பூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான், தனது 75ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். கந்தையா குணராசா என்ற இயற்பெயர் கொண்ட இவர், செங்கை ஆழியான் என்ற பெயராலேயே அறியப்பட்டார்.
1941ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி பிறந்த இவர், புனைகதைகளையும் வரலாற்றுசார் ஆக்கங்களையும் கட்டுரைகளையும் எழுதிப் புகழ்பெற்றவராவார்.
யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் போன்ற வரலாற்று
நூல்களையும் ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற வரலாற்று ஆய்வு நூலையும், குறுங்கதைகள், புதினங்கள் பலவற்றையும் இவர் எழுதியவராவார்.
ஈழநாடு பத்திரிகையில் அவர் தொடராக எழுதிவெளியிட்ட கிடுகுவேலி சிறுகதை, வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்டது. அதேபோல், அவரது வாடைக்காற்று, புதியம் ஆகிய படைப்புகள், திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தன.
தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்ற அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பல்கலைக்கழகக் கல்வியைக் கற்றார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
subramaniam jeyarajah Thursday, 03 March 2016 05:45 AM
மெளனம் சாதித்து மடிந்தது. மெளனம் கலைந்த அவர் கலைப் படைப்புகள் என்றும் அழியா வரம் பெற்றவை.அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
Reply : 0 0
subramaniam jeyarajah Thursday, 03 March 2016 05:46 AM
மெளனம் சாதித்து மடிந்தது. மெளனம் கலைந்த அவர் கலைப் படைப்புகள் என்றும் அழியா வரம் பெற்றவை.அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026