Princiya Dixci / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகக் கடமையாற்றிய சமூக சேவகரும் இலக்கிய ஆர்வலருமான மு.கதிர்காமநாதன், இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை காலமானார்.
கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் இன்று காலமானார்.
இவர், அகில இலங்கை இந்து மா மன்றத்தின் கௌரவ பொதுச்செயலாளர், உலக சைவப்பேரவையின் செயலாளர் என பல பொறுப்புமிக்க பதவிகளை வகித்து தமிழ்ச் சமூகத்துக்கென அரிய பணிகளை ஆற்றியுள்ளார்.
இவரது இழப்பு, சைவத்துக்கும் தமிழுக்கு பேரிழப்பாகும் என ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்றம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025